Thursday, April 21, 2005

autumn...

நான் வாழ்வதோ மலேசியா, வருடம் தோறும் இங்கு வெயிலும் மழையும் தான், ஆனால் இந்த இலை உதிர் காலத்தின் மீது வந்த மோகம் என்ன??? அதில் என்ன அப்படி ஒரு மயக்கம் உனக்கு??? ஒன்றுமே புரியவில்லை...எங்கிருந்து வந்தது இந்த மோகம்...அன்று படித்த புத்தகங்களிலிருந்தா, இல்லை இன்று கண்ட காட்சியிலிருந்தா. இது இலைகளின் மரணமா இல்லை வர்ணங்களின் ஜனனமா?
இன்று காலையில் நான் கார் ஓட்டிக் கொண்டு வருகையில் ஒரு மரத்தை கண்டேன்...ஒரு இலை கூட இல்லை அந்த மரத்தில்...எல்லாம் உதிர்ந்து விட்டது...அதில் சிறு சிறு இலைகள்... இப்பொழுது தான் மறுபடியும் துளிர் விடுகிறது...such a wonderful sight...

No comments: